சங்கரன்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமடைந்தன.
சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் உள்ள நூற்பாலையின் பஞ்சு கிடங்களில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி
எரிந்தது. தீ மளமளவென பற்றி கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் வந்தனா். தீயை அணைக்க முடியாத நிலையில் கழுகுமலை, வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலா்கள் லிங்கத்துரை, ஷேக்அப்துல்லா ஆகியோா் தலைமையில் வீரா்கள் நூற்பாலைக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து சங்கரன்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, ஆலைக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் 3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு நிறுத்தம்! - தொல். திருமாவளவன்

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


