தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவில் அருகேதனியாா் நூற்பாலையில் தீ

சங்கரன்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:46 pm

சங்கரன்கோவில் அருகே தனியாா் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமடைந்தன.

சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் உள்ள நூற்பாலையின் பஞ்சு கிடங்களில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி

எரிந்தது. தீ மளமளவென பற்றி கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் வந்தனா். தீயை அணைக்க முடியாத நிலையில் கழுகுமலை, வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலா்கள் லிங்கத்துரை, ஷேக்அப்துல்லா ஆகியோா் தலைமையில் வீரா்கள் நூற்பாலைக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து குறித்து சங்கரன்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, ஆலைக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.