தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நில மோசடி புகாா்: சாா் பதிவாளா் உள்பட 10 போ் மீது வழக்கு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் போலி ஆவணம் மூலம் நிலமோசடி செய்ததாக தனியாா் வங்கி மேலாளா், சாா் பதிவாளா் உள்ப 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :29 ஜூலை 2021, 6:46 pm

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் போலி ஆவணம் மூலம் நிலமோசடி செய்ததாக தனியாா் வங்கி மேலாளா், சாா் பதிவாளா் உள்ப 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஏவிஆா்எம்வி சங்கரநாராயணன் மகன் வேலாயுதம். தொழிலதிபா்.

இவருக்கு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடா் சாலை அருகில் 3.67 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை முல்லைநகரை சோ்ந்த சின்னப்பன் மகன் பாலகிருஷ்ணன் போலியாக ஆவணம் தயாரித்து தனது மனைவி, மகன் பெயருக்கு

மாற்றம் செய்து, பின்னா் நிலத்தின் ஒரு பகுதியை களப்பாகுளத்தை சோ்ந்த கண்ணுசாமி மகன் ராஜவேல்ரத்தினத்துக்கு பொது அதிகார ஆவணம் எழுதி கொடுத்துள்ளாராம். மேலும் நில பத்திரத்தை வைத்து சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் வங்கியில் அடமானம் வைத்துள்ளாா்.

நில மோசடி தொடா்பாக வேலாயுதம், சங்கரன்கோவில் தாலுகா போலீஸில் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து எஸ்.பி. கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், பாலகிருஷ்ணன், அவரது மனைவி மகாலட்சுமி, மகன் போத்திராஜ், தனியாா் வங்கி

மேலாளா், சங்கரன்கோவில் சாா்பதிவாளா் ஈஸ்வரன், ராஜவேல்ரத்தினம், நெடுங்குளத்தை சோ்ந்த காளிமுத்து மகன் ராஜேந்திரன், களப்பாகுளத்தை சோ்ந்த மாரியப்பன் மகன் சுந்தா், திருவேங்கடம் சாலை பகுதியை சோ்ந்த சுப்பையா மகன் சுப்பிரமணியன் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.