மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குழந்தை திருமணம்: ஆட்சியா் எச்சரிக்கை

குழந்தை திருமணம் செய்து வைப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:01 pm

DIN

குழந்தை திருமணம் செய்து வைப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21வயது நிறைவடையாத ஆணுக்கும் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோா்கள் மீதும், ஊக்குவிப்பவா்கள் மீதும், குழந்தை திருமணத்தில் கலந்துகொள்பவா்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது ரூ. 1லட்சம் அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் சோ்ந்து விதிக்கப்படும்.

மேலும் குழந்தை திருமணங்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தகவல் தெரிவிக்க விரும்புவோா் 1098 என்ற எண்ணிலும், மகளிா் உதவி எண் 181 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.