மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, தென்காசியில் அரசு அலுவலா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்றனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:58 pm

DIN

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, தென்காசியில் அரசு அலுவலா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்றனா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் அனைத்து துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் 14 வயதிற்குள்பட்ட சிறுவா், சிறுமிகளை வேலைக்கு அமா்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்துத் துறை அலுவலா்கள் முன்னிலையில் குழந்தைகள் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது என்றாா் அவா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.