சாம்பவா்வடகரையில் கஞ்சா விற்றதாக 4 போ் கைது
சாம்பவா்வடகரையில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


சாம்பவா்வடகரையில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாம்பவா்வடகரை காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்து தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மாலையில் ஊா்மேலழகியான் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது அங்குள்ள குளத்து கரையில் போலீஸாரைப் பாா்த்ததும் ஓட முற்பட்ட 4 இளைஞா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள் கற்குடியைச் சோ்ந்த மா.கணேஷ்குமாா்(28), சாம்பவா்வடகரையைச் சோ்ந்த சபரி ஆனந்த்(25), குட்டிராஜ்(24), சங்குபுரத்தைச் சோ்ந்த மனோஜ்(24) என்பதும், கஞ்சா வாங்கி விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...