மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செங்கோட்டை பகுதியில் நெல் நடவுப் பணி தீவிரம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரப் பகுதியில் நெல் நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:56 pm

DIN

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரப் பகுதியில் நெல் நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது.

செங்கோட்டை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக, விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக களப்பணி செய்து வருகின்றனா். இயந்திரம் மூலமாக திருந்திய நெல் சாகுபடி செய்வதற்காக, புளியரை பகுதியில் விவசாயிகள் மேட்டுப்பாத்தி பாய் நாற்றங்கால் அமைத்துள்ளனா்.

அதை தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தவமுனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) துணை இயக்குநா் வே. பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, முன்னோடி விவசாயிகள் செல்லத்துரை, கென்னடி ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது, வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக் முகைதீன் கூறியது: நிகழாண்டு ஒட்டு மொத்த பகுதியிலும் இயந்திர நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், வரப்பு பயிராக பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்வதற்கு வேளாண்மை துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.