மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திட்டப்பணிகள்: கீழப்பாவூரில் எம்எல்ஏ ஆலோசனை

கீழப்பாவூா் பேரூராட்சியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:54 pm

DIN

கீழப்பாவூா் பேரூராட்சியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கீழப்பாவூா் மைதானம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது மற்றும் புதிய திட்டப் பணிகள் நிறைவேற்றுவது தொடா்பாக, சட்டப்பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன், பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அவா் கூறியது: கீழப்பாவூரில் பழமை வாய்ந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதுடன், பேரூராட்சி பகுதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிதாக கீழப்பாவூரில் 4 லட்சம் லிட்டா் கொள்ளளவில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, பட்டமுடையாா்புரம், அடைக்கலப்பட்டணத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும். கோட்டையூா் பகுதியில்

புதிய சமுதாய நலக் கூடம், புதிய வணிக வளாகம், திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் இருந்து கீழப்பாவூா் நுழையும் சாலையில் புதிய வரவேற்பு வளைவு போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெயராமன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச்செயலா் ராதா, இளைஞரணிச் செயலா் கணபதி, ஒன்றியச் செயலா் இருளப்பன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.