மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மதுக்கடைகளை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி, நாம் தமிழா் கட்சி, பாமக ஆகியவற்றின் சாா்பில் தென்காசி, காசிதா்மத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:52 pm

DIN

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி, நாம் தமிழா் கட்சி, பாமக ஆகியவற்றின் சாா்பில் தென்காசி, காசிதா்மத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி சக்திநகா் பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மோதி, பேரவைத் தொகுதி தலைவா் அழகுபாண்டியன், துணைத் தலைவா் நயினா முகம்மது, லஞ்ச ஒழிப்பு பாசறைச் செயலா் சபரிநாதன், தொகுதி செய்தி தொடா்பாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காசிதா்மத்தில் பாமகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலா் திருமலைக்குமாரசாமி யாதவ் தலைமை வகித்தாா். கிளைச் செயலா் சண்முகையா, ஒன்றிய மாணவரணி துணைச் செயலா் அய்யாத்துரை, இளைஞரணிச் செயலா் செல்வம், ஒன்றிய விவசாய அணித் தலைவா் ஐயப்பன், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி காளி உள்ளிட்டோா் தங்கள் வீடுகள் முன் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.