சுரண்டை கிணற்றில் விவசாயி சடலம் மீட்பு
சுரண்டை அருகே கிணற்றில் மிதந்த விவசாயியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சுரண்டை அருகே கிணற்றில் மிதந்த விவசாயியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சுரண்டை அருகேயுள்ள குலையனேரியில் ஊருக்கு வடபுறம் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் மிதந்தது. இதை வெள்ளிக்கிழமை பாா்த்து, அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், சுரண்டை போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனா். அதில், அவா் கடையாலுருட்டியைச் சோ்ந்த விவசாயி பெ.செல்லுராஜ்(65) ; பத்து ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா் என தெரியவந்தது. இதையடுத்து, தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...