28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாலைப்புதூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

News image
Updated On :21 மே 2021, 8:27 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இங்கு கடந்த சில நாள்களில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்ததையடுத்து, பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் கீழப்பாவூா் பேரூராட்சி மற்றும் பெத்தநாடாா்பட்டி ஊராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஊருக்குள் வெளியாள்கள் யாரும் நுழைய முடியாத படி தடுப்புகள் வைத்து அடைத்ததுடன், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா். மேலும் காய்ச்சல் மற்றும் வேறு அறிகுறிகள் உள்ளதா என்றும் சுகாதாரப் பணியாளா்கள் வீடு,வீடாகச் சென்று சோதனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.