பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையில் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே. காளிதாசன் தலைமை வகித்தாா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முகாமைத் தொடக்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ், கமிட்டி நிா்வாகிகள் அருணோதயம், எஸ்.பி. கண்ணன், கே.பி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.