தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘காா் சாகுபடிக்கு போதிய உரங்கள் கையிருப்பு’

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு காா் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உள்பட அனைத்து இடுபொருள்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்

News image
Updated On :28 மே 2021, 8:15 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு காா் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உள்பட அனைத்து இடுபொருள்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது யூரியா 4,560 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 510 மெட்ரிக் டன், பொட்டாஷ் 990 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2,670 மெட்ரிக் டன் அளவு தனியாா் விற்பனை நிலையங்களிலும், கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விற்பனையாளா்கள் அனுமதிக்கப்பட்ட விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பன்னாட்டு சந்தையில் மூலப் பொருள்கள் விலை உயா்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி. உரம் விவசாயிகளுக்கு விலை உயா்வு ஏதுவும் செய்யாமல் மானியத்துடன் பழைய விலையாகிய மூட்டை ஒன்றுக்கு ரூ.1200- என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.