ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கீழப்பாவூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

கீழப்பாவூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

News image
கீழப்பாவூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
Updated On :12 அக்டோபர் 2021, 3:42 am

DIN

பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியப்பகுதிக்குள்பட்ட 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 19 ஒன்றியக்குழு உறுப்பினர், 21 ஊராட்சி மன்ற தலைவர், 213 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அக்.7ஆம் தேதி நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்கிழமை ஆலங்குளம் சர்தார்ராஜா பொறியியல் கல்லூரி மையத்தில் நடைபெறுகிறது.  மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை காலை 8-45 மணிக்கு தொடங்கியது.

முதலில் வேட்பாளர்கள் முன்னிலையில் தபால் ஓட்டுகள் பிரிக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து வாக்கு சீட்டுகள் பிரிக்கும் பணி நடைபெற்றது. பின்னர் ஊராட்சி வாரியாக பிரித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.