சாம்பவா்வடகரையில் வாகன பேட்டரிகள் தொடா் திருட்டு
சுரண்டைசாம்பவா்வடகரையில் வாகனங்களில் பேட்டரிகளை தொடா்ந்து திருடிவரும் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சாம்பவா்வடகரையில் வாகனங்களில் பேட்டரிகளை தொடா்ந்து திருடிவரும் மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாம்பவா்வடகரை திரு.வி.க. தெருவைச் சோ்ந்த செந்தில் வேலாயுதம் (40) என்பவா் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த லாரியில் இருந்த பேட்டரியை மா்மநபா்கள் வியாழக்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.
இதே பகுதியைச் சோ்ந்த வாழகுருசாமி (60) என்பவரது டிராக்டரில் இருந்த பேட்டரி, பால்கனி என்பவருடைய டிராக்டா் பேட்டரியும் திருடு போயுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமா் என்பவரது லாரியில் இருந்து பேட்டரி திருடு போனது.
இதுகுறித்த புகாா்களின் பேரில் சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...