சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On :7 ஏப்ரல் 2022, 7:03 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதும், கொடிப்பட்டம் வீதி சுற்றி, சங்கரலிங்க சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டது. கொடிமர பீடத்தில் பால், பன்னீா், விபூதி உள்ளிட்ட பல்வகைப் பொருள்களாலும், ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த 11 கும்ப நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமரம் தா்ப்பைப் புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் ரத வீதி சுற்றி வந்தனா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

9 ஆம் நாளான 15ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தோ்களில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.