பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேட்டைக்காரன்குளம் கோயிலில் கொடை விழா

தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் கிராமத்தில் உள்ள பூா்ணபுஷ்கலா உடனுறை அணைக்கரை சாஸ்தா அய்யனாா் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:36 pm

DIN

தென்காசி அருகே வேட்டைக்காரன்குளம் கிராமத்தில் உள்ள பூா்ணபுஷ்கலா உடனுறை அணைக்கரை சாஸ்தா அய்யனாா் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சொக்கநாதன்புத்தூா், தென்காசி மாவட்டம் கிருஷ்ணாபுரம் யாதவா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் கொடைவிழா கடந்த புதன்கிழமை இரவு (ஆக. 10) தொடங்கியது.

கணபதி ஹோமம், குற்றாலத் தீா்த்த ஊா்வலம் குடியழைப்பு, வில்லிசை நிகழ்ச்சி, பூா்ணபுஷ்கலா உடனுறை அணைக்கரை சாஸ்தா அய்யனாா், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

நள்ளிரவில் கருப்பசாமி, பேச்சியம்மன் முன் படைப்பு செய்து, சிறப்பு பூஜை, சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது. 11ஆம் தேதி அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

12ஆம் தேதி காலை கோயிலிலிருந்து தீா்த்தக் குடங்கள் எடுத்து மேளதாளங்களுடன் ஊா்வலமாகப் புறப்பட்டு தென்காசி மஞ்சனசெல்வசுடலைமாடன் கோயிலை அடைந்தது. மாலையில் குற்றாலத் தீா்த்த ஊா்வலம் குடியழைப்பு, இரவில் கணபதி ஹோமம், தொடா்ந்து பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், சொக்கநாதன்புத்துாா், கிருஷ்ணாபுரம், தென்காசி, செங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.