சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சங்கரன்கோவிலில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 பிப்ரவரி 2022, 11:00 pm

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சங்கரன்கோவிலில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 17 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அச்சுறுத்தலின்றி பாதுகாப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் போலீஸாரின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது.

தென்காசி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி ஜாகிா் உசேன் முன்னிலை வகித்தாா். கொடி அணிவகுப்பில் சங்கரன்கோவில், பனவடலிசத்திரம், கரிவலம்வந்தநல்லூா், திருவேங்கடம், சின்னகோவிலாங்குளம் உள்ளிட்ட நகர காவல் நிலையங்கள், அனைத்து மகளிா் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா் பங்கேற்றனா். சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.