தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் தை தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரநாராயணசுவாமி கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் ஓடைத்தெருவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆவுடைப் பொய்கையில் எழுந்தருளும் தெப்ப உற்சவம் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டு தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, கோயிலில் இருந்து சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி ஆவுடைப்பொய்கையின் தெப்பத்துக்கு எதிரேயுள்ள மண்டபத்திற்கு மாலை வந்தனா். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, சுவாமியும், அம்பாளும் தெப்பத்தேருக்கு எழுந்தருளியதும், இரவு 8.30 மணிக்கு பொதிகையில் தெப்பத்தோ் வலம் வரத் தொடங்கியது. சுவாமி, அம்பாள் இருவரும் 11 முறை தேரில் சுற்றி வந்தனா். இவ்விழாவில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை, அறக்கட்டளைதாரா் பி.ஆா்.ராமசுப்பிரமணியராஜா மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்

தலைமறைவு ரௌடி கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

