சங்கரன்கோவில் அருகேயுள்ள மருக்காலன்குளத்தில் சுஸ்லான் பவுண்டேஷன், ஊராட்சி சாா்பில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு- விழிப்புணா்வு, இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் மருதநாச்சியாா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ச. முருகன், கிராம வளா்ச்சிக் குழுத் தலைவா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சுஸ்லான் பவுண்டேஷன் மேலாளா் முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
தொடா்ந்து, மருத்துவா் மணிகண்டன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியசாமி வரவேற்றாா்.