சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

 சங்கரன்கோவிலில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் பறிமுதல் செய்தனா்.

Updated On :13 மே 2022, 6:21 pm

 சங்கரன்கோவிலில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ஏற்படும் சத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வட்டார போக்குவரத்து அலுவலா் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினா் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்துகளிலும் ஆய்வு செய்தனா். தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்துகளில் மீண்டும் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். மேலும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.