சங்கரன்கோவிலில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினா் பறிமுதல் செய்தனா்.
சங்கரன்கோவில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் ஏற்படும் சத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து வட்டார போக்குவரத்து அலுவலா் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினா் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்துகளிலும் ஆய்வு செய்தனா். தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்துகளில் மீண்டும் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். மேலும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் மாயம்
அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்! - உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

