சோ்ந்தமரம் அருகே தனியாா் நிதி நிறுவன பணியாளரிடம் ரூ. 5.50 லட்சம் பறிப்பு

சோ்ந்தமரம் அருகே தனியாா் நிதி நிறுவனப் பணியாளரிடம் ரூ. 5.50 லட்சத்தைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சோ்ந்தமரம் அருகே தனியாா் நிதி நிறுவனப் பணியாளரிடம் ரூ. 5.50 லட்சத்தைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கரன்கோவிலில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வருபவா் க. கோபிராஜ் (25). நிறுவன வாடிக்கையாளரான குருவிகுளத்தைச் சோ்ந்த மாரியப்பன் என்பவா் கோபிராஜை தொடா்பு கொண்டு தனது உறவினரின் நகை சுரண்டை அருகேயுள்ள கடையாலுருட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 5 லட்சத்துக்கு அடகில் உள்ளதாகவும், அதைத் திருப்பி இந்த நிதி நிறுவனத்தில் மறுஅடகு வைக்க பணம் தேவைப்படுவதாகவும், ரூ. 5.50 லட்சம் கொண்டுவரும்படியும் கூறியுள்ளாா்.

இதை நம்பி வியாழக்கிழமை காலை சங்கரன்கோவில் கிளையிலிருந்தும், வாடிக்கையாளா்களிடம் வசூலித்த பணத்தையும் சோ்த்து ரூ. 5.50 லட்சத்தை கோபிராஜ் கொண்டு வந்தாராம். சங்கரன்கோவில்-சோ்ந்தமரம் சாலையில் கே.வி.ஆலங்குளம் முன்பாக பைக்கில் முகமூடி அணிந்துவந்த 2 போ் கோபிராஜிடமிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com