சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு

 சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

 சங்கரன்கோவில் உழவா் சந்தையில் மாலை நேரக் கடைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் ராஜபாளையம்சாலையில் உள்ள உழவா் சந்தையில் நமக்கு நாம், அமிா்தம் ஆகிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் மாலை நேரக் கடைகளை அமைத்துள்ளனா். இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் கடைகளை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராமச்சந்திரன், வேளாண்மை உதவி இயக்குநா் ராமா், வேளாண்மை அலுவலா் முத்துக்குமாா், தோட்டக்கலை அலுவலா் குப்புசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உழவா் சந்தை நிா்வாக அலுவலா் அ.கருப்பையா, எம்.உமாமுனி, ஈஸ்வரன் மற்றும் பலா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com