மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

News image

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் - @INCJammuKashmir

Updated On :5 ஏப்ரல் 2026, 4:43 pm

ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் சுமத்தியுள்ளது.

ஜம்முவின் கௌ மன்ஹாசன் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜேகேபிசிசி) தலைவர் தாரிக் ஹமீது கர்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அமைந்திருந்தபோதிலும், துணைநிலை ஆளுநர் வழியாக மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி சத்தமே இல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதல்களைக் கேட்டு நடக்கிறார். இந்திய விடுதலைக்குப்பின் இந்த நாட்டில் இப்படி நடந்ததேயில்லை.

ஜம்மு-காஷ்மீருக்கான மாநில உரிமை நிராகரிக்கப்படுவதன் மூலம் இங்குள்ள மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது” என்றார்.

Summary

Centre treating J-K people as 'second-class citizens': Congress chief

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.