மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

3 ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை!

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுவது குறித்து...

Tamil Nadu Congress Committee President K. Selvaprerunthagai

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை - (கோப்புப் படம்)

Published On :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறுகிறது.

இதையடுத்து, திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 27 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நீண்ட இழுபறிக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 3 ஆவது முறையாகப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சுமார் 11,497 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற செல்வப்பெருந்தகை முதல்முறை காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார். பின்னர், 2024 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2011 ஆம் ஆண்டு செங்கம் (தனி) தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டுத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu Congress Committee President Selvaprerunthagai is contesting from the Sriperumbudur (Reserved) constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.