திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சோலைசேரியில் அரசு மாணவியா் விடுதி திறப்பு

சங்கரன்கோவில் அருகே சோலைசேரியில் ஆதிதிராவிட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து விடுதியை ஆட்சியா் ப.ஆகாஷ் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

Updated On :3 நவம்பர் 2022, 10:11 pm

சங்கரன்கோவில் அருகே சோலைசேரியில் ஆதிதிராவிட மாணவியா் விடுதியை முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து விடுதியை ஆட்சியா் ப.ஆகாஷ் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

சங்கரன்கோவில் அருகே சோலைசேரியில் அரசு ஆதிதிராவிட நலக் கல்லூரி மாணவியா் விடுதி 584.58 ச.மீ. பரப்பளவில் ரூ.126.09 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. விடுதியில் 75 மாணவிகள் தங்கும் வகையில் அறைகள், உணவுக்கூடம், சமையலறை, கழிப்பறை, சூரியஓளி மின்வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா். அப்போது இந்த விடுதியில் தென்காசி ஆட்சியா் ப.ஆகாஷ், வாசுதேவநலலூா் எம்.எல்.ஏ. சதன்திருமலைக்குமாா் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.