மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி மாணவியை கேலி செய்த இருவருக்கு ஓராண்டு சிறை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பள்ளி மாணவியை கேலி செய்த வழக்கில் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:19 pm

DIN

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பள்ளி மாணவியை கேலி செய்த வழக்கில் 2 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2012, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரகுளம் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவி ஒருவரை அதே கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சக்திவேல் மற்றும் செல்லத்துரை மகன் முத்துகுமாா் ஆகியோா் கேலி செய்ததாக மாணவியின் பெற்றோா் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு ஆலங்குளம் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ஆனந்தவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.