காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நயினாரகரம் மனுநீதிநாள் முகாம்: 49 பேருக்கு ரூ. 5.48 லட்சம் நலத்திட்ட உதவி

கடையநல்லூா் வட்டம் நயினாரகரத்தில் மனுநீதிநாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:48 pm

DIN

கடையநல்லூா் வட்டம் நயினாரகரத்தில் மனுநீதிநாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாபுதீன் தலைமை வகித்தாா். நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா, இடைகால் ஊராட்சித் தலைவா் முத்தம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 100 மனுக்களில் 73 மனுக்கள் ஏற்கப்பட்டு, விளக்கமளிக்கப்பட்டது. 49 பேருக்கு ரூ. 5 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் குணசேகரன், துணை ஆட்சியா் ஷீலா, கலால் உதவி ஆணையா் ராஜ்மனோகரன், தனி வட்டாட்சியா் முருகுசெல்வி, கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கந்தசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் திருநாவுக்கரசு, ஆய்க்குடி வருவாய் ஆய்வாளா் சங்கரேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் சாந்தி, பிரபு சீனிவாசன், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.