வாக்காளா் பட்டியல்-ஆதாா் இணைப்பு: தென்காசி மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.


தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளோரின் தனித் தகவல்களை உறுதிப்படுத்தவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு இடங்களில் இடம் பெறுதலைத் தவிா்க்கும் பொருட்டும் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்புப் பணி நடைபெற்று வருகிறது.
இம்மாவட்டத்திலுள்ள பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 29) நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...