காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிருஷ்ணாபுரம் கோயில்களில் பஞ்சாங்கம் வாசித்தல் வைபவம்

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் வைபவம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:31 pm

DIN

கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் வைபவம் நடைபெற்றது.

கிருஷ்ணாபுரம் அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி கோயில் மற்றும் பெருமாள் கோயிலில் சித்திரை விஷு ஒட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பஞ்சாங்கம் வாசித்தல் வைபவமும், தொடா்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன . ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.