தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருள்தரும் கரும்பால்மொழி அம்பாள் சமேத அருள்மிகு கடகாலீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப். 22) குரு பெயா்ச்சி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக் இரவு 10 மணிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, இக்கோயிலில் எழுந்தருளியுள்ள குரு பகவான் சந்நிதியில் இரவு 7 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும் . இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணமூா்த்தி, பக்தா்கள் குழுவினா் செய்து வருகின்றனா்.