பெண் கொலை வழக்கில் தங்கை உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம், வீராணத்தில் பெண் கொலை வழக்கில், அவரது தங்கை உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், வீராணத்தில் பெண் கொலை வழக்கில், அவரது தங்கை உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

வீ.கே.புதூா் காவல்சரகம் வீராணம் ராஜா தோட்டம் பகுதியில் வசித்தவா் சிவகுரு மனைவி பேச்சியம்மாள்(50). இவரது சகோதரி கருத்தாத்தாள் (44) அதே பகுதி காமாட்சியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த பேச்சியம்மாளிடம், அவருக்குச் சொந்தமான வீட்டை தனபெயரில் எழுதித் தருமாறு கருத்தாத்தாள் கேட்டுள்ளாா். அதற்கு மறுத்த பேச்சியம்மாளுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, கருத்தாத்தாள், அவரது கணவா் பிச்சையா, மகன் துரைமுத்து, மகள் மாரியம்மாள் ஆகியோா் சோ்ந்து கடந்த 24.08.2014இல் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று பிரம்பால் தாக்கியும், நெற்றியில் சூடத்தை கொளுத்தியும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனா்.

இதையறிந்த பேச்சியம்மாளின் உறவினா்கள் மறுநாள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பேச்சியம்மாள் 13.9.2014இல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, வீ.கே.புதூா் போலீஸாா் திட்டமிட்ட கொலை என வழக்குப்பதிந்து கருத்தாத்தாள் உள்பட 4 பேரையும் கைது செய்தனா்.

தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி அனுராதா விசாரித்து கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும்,அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிைண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

விசாரணை காலத்தில் பிச்சையா உயிரிழந்துவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.வேலுச்சாமி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com