சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
விழுப்புரம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, சசிகலா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, வரும் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் இருவரும் அதுதொடர்பான கூட்டறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இணைந்து கூட்டணி அமைக்கிறது.
தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும், தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதமாக இந்த கூட்டணி செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்கத்தில் நான்கு முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் தற்போது ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சமீபத்தில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Sasikala and PMK founder Ramadoss have announced that they will contest the Tamil Nadu and Puducherry assembly elections together.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

ஒரு சொட்டு மதுவில்லாத தமிழகம்... தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராமதாஸ்!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி? இன்று சந்திப்பு!

கூட்டணி குறித்து 3 நாள்களில் முடிவு! - ராமதாஸ்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


