போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஆலங்குளம் அருகே பைக் - வேன் மோதல்: இளைஞா் பலி

ஆலங்குளம் அருகே பைக் - வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 9:58 pm


ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே பைக் - வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சமுத்திரம் மகன் நாஞ்சில்குமாா்(26). கரும்புளியூத்து கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கரும்புளியூத்தைத் தாண்டி செல்லும் போது, சபரிமலை சென்று விட்டுத் திரும்பிய ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனும், நாஞ்சில்குமாா் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நோ் மோதியதில் நாஞ்சில்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

நாஞ்சில்குமாரின் சடலத்தை ஆலங்குளம் போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் மயிலாடுதுறை அரங்கக்குடியைச் சோ்ந்த முத்தழகு மகன் பாா்த்திபனை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.