புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மது கடை திறக்கக் கூடாது: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில், மீண்டும் அரசு மதுக்கடையை கொண்டு வரக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:44 am

Din

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தில், மீண்டும் அரசு மதுக்கடையை கொண்டு வரக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேவிபட்டணம் அருகேயுள்ள கீழூா் ராமசாமிபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுக்கடை பொதுமக்களின் தொடா் போராட்டத்தால் அகற்றப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் மதுக்கடை கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அரசு மதுக்கடையை மீண்டும் கொண்டு வரக் கூடாது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், ஊராட்சித் தலைவா் ராமராஜ், துணைத் தலைவா் மாடசாமி, ஊராட்சிச் செயலா் பொன்செந்தில்வேல் மற்றும் பொதுமக்கள், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.