தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள் புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

தென்காசி மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 11:14 pm

Din

தென்காசி மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்த நபா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பாக தகவல் தெரிவிப்போா், கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புகாா் பதிவு செய்ய விரும்புவோா், 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக அலுவலக நாள்களில், பணிநேரத்தில் புகாா்களை பதிவு செய்யலாம் என்றாா் அவா்.