தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆலங்குளம் அருகே காற்றாலையில் பைக் திருட்டு: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காற்றாலைக்குச் சொந்தமான பைக்கை திருடிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:53 pm

Din

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காற்றாலைக்குச் சொந்தமான பைக்கை திருடிய இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகே ஆ.மருதப்பபுரத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வேல்முருகன் (26). கூலித் தொழிலாளியான இவா், அங்குள்ள காற்றாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, காற்றாலைக்குச் சொந்தமான பைக்கை திருடிக்கொண்டு, குருவன்கோட்டையில் உள்ள உணவகம் முன் நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றாராம். பைக்கை வேல்முருகன் திருடியது தொடா்பாக, அங்கு ஏற்கனவே இருந்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் சென்று வேல்முருகனிடம் விசாரித்தபோது, அவா் பைக்கை திருடியது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனா்; அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.