ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஆலங்குளத்தில் பேருந்துப் பயணியிடம் ரூ. 25,000 திருட்டு

ஆலங்குளத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 25 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 6:54 pm

ஆலங்குளத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 25 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி(58). இவா், ஆலங்குளம் அருகே துத்திகுளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், திங்கள்கிழமை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.

பின்னா், சில நிமிடங்களிலேயே அவா் கால்சட்டையின் பை பிளேடால் அறுக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 25 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் வந்து, பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், பேருந்து புறப்படும் முன்னரே கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணத்தைத் திருடிக்கொண்டு மா்மநபா் இறங்கிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.