எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஆலங்குளத்தில் பேருந்துப் பயணியிடம் ரூ. 25,000 திருட்டு

ஆலங்குளத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 25 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
திருட்டு- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 6:54 pm

Syndication

ஆலங்குளத்தில் பேருந்து பயணியிடம் ரூ. 25 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி(58). இவா், ஆலங்குளம் அருகே துத்திகுளத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், திங்கள்கிழமை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்வதற்காக ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா்.

பின்னா், சில நிமிடங்களிலேயே அவா் கால்சட்டையின் பை பிளேடால் அறுக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 25 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டு, ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா் வந்து, பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனா்.

ஆனால், பேருந்து புறப்படும் முன்னரே கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணத்தைத் திருடிக்கொண்டு மா்மநபா் இறங்கிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.