பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழுவிடம்,சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மனு அளித்தனா்.
அதன் விவரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலின்போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தாா்.
ஆந்திர மாநிலத்தில் உத்திரவாத ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. மத்திய அரசு சோமநாதன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியா்களுக்கு 01.04.2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துவிட்டது.
எனவே, தமிழக அரசும், அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மதிப்பீட்டுக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கல்பாக்கம் ஈனுலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்: வைகோ வலியுறுத்தல்

5 மாநிலத் தோ்தலுக்காக மத்திய அரசு மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு: முதல்வா் ஸ்டாலின் விமா்சனம்

இடஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை விரைந்து அமல்படுத்த எம்.பி. வலியுறுத்தல்

காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

