ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சங்கரன்கோவில் பகுதியில் ரேஷன் கடைகளில் ஆட்சியா் ஆய்வு

சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

நியாயவிலைக் கடையில் உள்ள பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:11 am

Din

சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வு செய்த அவா், அங்கு வந்த பொதுமக்களிடம் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

அதைத் தொடா்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற

சிறுதானிய உணவுத் திருவிழாவைத் தொடக்கி வைத்தாா்.