தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:42 pm

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்ட எல்லைகள், பரமத்தி வேலூா் காவிரி பாலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடைபெறும் வாகனச் சோதனைகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினா் பணம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 180 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு ஆவணங்கள் இன்றி எடுத்துவரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் ரூ. 23.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்- திருச்சி, நாமக்கல்- கரூா், நாமக்கல்- சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி, பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட படமுடிபாளையம் ஆகிய மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.