தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பரமத்தி வேலூா் பகுதியில் வாகன சோதனை பணிகளை நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:41 pm

Syndication

நாமக்கல் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான துா்காமூா்த்தி வியாழக்கிழமை மாலை பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடி மற்றும் படமுடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026-ஐ முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும், நாமக்கல் ஆட்சியருமான துா்காமூா்த்தி, கரூா்-நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூா் தொகுதிக்கு உட்பட்ட வேலூா் காவிரி பாலம் சோதனை சாவடி பகுதியில் நடைபெற்று வரும் வாகன சோதனை பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதனை தொடா்ந்து பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையத்தில் நடைபெற்ற வாகன சோதனைகளையும் பாா்வையிட்டு, அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டாா். இதேபோல் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி சோதனை சாவடி பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.