காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ. 1 கோடிக்கு விற்பனை இலக்கு: ஆட்சியா்

தென்காசி மாவட்ட கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 1கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image

கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 1:14 am

Din

தென்காசி மாவட்ட கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ. 1கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தென்காசி சுவாமி சந்நிதி தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.1கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30சத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுஏஈ புடவைகள், திருப்புவனம் பட்டுச் சேலைகள் மற்றும்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் நெல்லை மண்டலத்தில் உள்ள பதிமூன்று விற்பனை நிலையத்திலும் ரூ.9.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருடம் ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதன்படி 11 மாத சந்தா தொகை, வாடிக்கையாளா்கள் செலுத்தினால் 12ஆவது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30சத அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், சேமிப்பு கிடங்கு மேலாளா் ராமச்சந்திரன், மேலாளா் அருள்செல்வி, தென்காசி திருமதி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியை ராணிலதா கலந்து கொண்டனா்.