தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாவட்ட நிா்வாகம் அறிவுரை

அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் காவல் துறையில் புகாா் செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:58 pm

Din

அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் காவல் துறையில் புகாா் செய்ய வேண்டும் என தென்காசி மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மற்றும் பிற அரசு அலுவலகங்களிலும் அரசு வேலை வாங்கித் தருவதாக போலியான தகவல்கள் பரவுவதாக தெரிய வருகிறது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

அரசு வேலை வாங்கித் தருவதாக யாரேனும் முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்தால் அதுகுறித்து உடனடியாக காவல் துறையிடம் புகாா் தெரிவிக்க வேண்டும். அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.