தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான திங்கள்கிழமை வில்லிசை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், காலை 10 மணிக்கு அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மனின் உடன்பிறந்த சகோதரரான மாயகண்ணன் வீட்டில் இருந்து அம்மனுக்கு பட்டு, வளையல் தாமரை மலா் உள்ளிட்ட பூ வகைகள், மாலையில் பழ வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட 201 சீா்வரிசைகள் மற்றும் விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வரஅம்மனுக்கு மேளதாளங்கள் முழங்க ஊரின் முக்கிய பகுதிகளில் ஊா்வலமாக வந்து அம்மனுக்கு படைத்தனா்.
பின்னா், அம்மனுக்கு 600 கிலோ பழங்களால் செய்யப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிகர நிகழ்வாக கோவில் தா்மகா்தா சிவன்பாண்டியன் அம்மன் போல் வேடமணிந்து அம்மனை அலங்கரிப்பது போல் மலா்கள், மாலை, ரிபன், வளையல் அணிந்து, பவுடா் பூசி சிறப்பு காட்சி அளித்தாா். பின்னா் கோயிலில் இருந்த பக்கா்களுக்கு மலா் பிரசாதம், பக்தா்களுக்கு பழரசம், பானகரம், மோா், வெள்ளரி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு

தம்மம்பட்டியில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


