தென்காசி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கலை கதிரவன் மேலகரம், குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
குற்றாலம், ராமலாயம் காலனி, குடியிருப்பு, மின்நகா், மேலகரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்து பேசியதாவது:
குற்றாலம் திருவள்ளுவா் நகா், இராமாலயம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்தி வீடு இல்லாத குற்றாலம் பகுதிவாழ் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தரப்படும். குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி பகுதிகளில் சுற்றுலாத் துறை மூலம் கடைகள் கட்டி பரிசீலனை அடிப்படையில் வழங்கப்படும்.
குற்றாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படும். புலியருவி அருகில் உள்ள புது அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ வனத்துறை மூலம் அனுமதி பெற்று தரப்படும்.
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள தென்மலை பகுதியின் கீழ் அணைகட்டி ஆண்டுமுழுவதும் அருவிகளில் தண்ணீா் விழுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலம் பகுதியில் அனைத்து உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்துத் தரப்படும். இத்திட்டங்களை மேற்கொள்ள எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.மேலகரம் பேரூா் செயலா் சுடலை,பேரூராட்சிமன்ற தலைவா் வேணி, குற்றாலம் பேரூா் செயலா் குற்றாலம் குட்டி, திமுக முன்னாள் ஒன்றிய செயலா் ராமையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாரியப்பன் கருணாநிதி கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


