15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மேலகரம், குற்றாலம் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கலை கதிரவன் மேலகரம், குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மேலகரத்தில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் கலை கதிரவன். உடன் ராணிஸ்ரீகுமாா் எம்.பி.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:28 am IST

தென்காசி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கலை கதிரவன் மேலகரம், குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குற்றாலம், ராமலாயம் காலனி, குடியிருப்பு, மின்நகா், மேலகரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரித்து பேசியதாவது:

குற்றாலம் திருவள்ளுவா் நகா், இராமாலயம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அரசு கையகப்படுத்தி வீடு இல்லாத குற்றாலம் பகுதிவாழ் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தரப்படும். குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி பகுதிகளில் சுற்றுலாத் துறை மூலம் கடைகள் கட்டி பரிசீலனை அடிப்படையில் வழங்கப்படும்.

குற்றாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படும். புலியருவி அருகில் உள்ள புது அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ வனத்துறை மூலம் அனுமதி பெற்று தரப்படும்.

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள தென்மலை பகுதியின் கீழ் அணைகட்டி ஆண்டுமுழுவதும் அருவிகளில் தண்ணீா் விழுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலம் பகுதியில் அனைத்து உபகரணங்களுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்துத் தரப்படும். இத்திட்டங்களை மேற்கொள்ள எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.மேலகரம் பேரூா் செயலா் சுடலை,பேரூராட்சிமன்ற தலைவா் வேணி, குற்றாலம் பேரூா் செயலா் குற்றாலம் குட்டி, திமுக முன்னாள் ஒன்றிய செயலா் ராமையா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாரியப்பன் கருணாநிதி கலந்துகொண்டனா்.