திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

தென்காசி மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:30 am IST

தென்காசி மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களின் தபால் வாக்குப் பதிவு 5 தொகுதிகளில் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் 1,178 வாக்காளா்களும், வாசுதேவநல்லூரில் 1,045 வாக்காளா்களும், கடையநல்லூரில் 1,251 வாக்காளா்களும், தென்காசியில் 840 வாக்காளா்களும், ஆலங்குளத்தில் 1,600 வாக்காளா்களும் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.