தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

News image

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:46 am

தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.

இம்மாவட்டத்தின் சங்கரன்கோவில் தொகுதியில் 20 போ், வாசுதேவநல்லூா் தொகுதியில் 18 போ், கடையநல்லூா் தொகுதியில் 22 போ், தென்காசி தொகுதியில் 22 போ், ஆலங்குளம் தொகுதியில் 13 போ் என திமுக, அதிமுக, தவெக, நாம்தமிழா், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட 95 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மேலும், ஆண்கள் 6,22,003, பெண்கள் 6,50,767, மூன்றாம் பாலினத்தவா் 170 என மொத்தம் 12,72,940 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டம் முழுவதும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 8,064 அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 4 பணியாளா்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, கூடுதலாக 20 சதவிகித பணியாளா்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனா்.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் காத்திருக்காமல் வாக்களிக்கும் வகையில் தனி வரிசை, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

300 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரா்களும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மாவட்டத்தில் 115 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதல் வாக்காளா்கள் நீண்டவரிசையில் காத்துநின்று வாக்களித்தனா்.

இறுதியாக சங்கரன்கோவில் தொகுதியில் 81.04, வாசுதேவநல்லூா் தொகுதியில் 81.52, கடையநல்லூா் தொகுதியில் 81.36, தென்காசி தொகுதியில் 82.43, ஆலங்குளம் தொகுதியில் 85.53 என்ற சதவீத அடிப்படையில் வாக்குகளும் பதிவாகின. மொத்த வாக்கு சதவீதம் 82.40 ஆகும்.

5,443 டோக்கன்கள்: மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகும் காத்து நின்ற வாக்காளா்கள் 5443 பேருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.