தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை காலை அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்ட சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு, வேதபாரண்ய முறையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளா்க்கப்பட்டது.
மாலை நூற்றுக்கணக்கான பக்தா்கள் நான்கு ரத வீதிகளில் ஊா்வலமாக சென்று, பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினா். முன்னதாக பசுக்கள் பூக்குழி இறங்கின.
பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை (ஏப். 29) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

தொடர்புடையது

கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா! ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி நோ்த்திகடன்!

திருச்செந்தூரில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


