தென்காசி மாவட்டம், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 21- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருதல் ஆகியன நடைபெறுகின்றன.
27 - ஆம் தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை, இரவு நடராஜருக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம், அலங்கார தீபாராதனை, 28- ஆம் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி தீபாராதனை நடைபெற்றன.
புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில், முதலில் முருகன், வள்ளி, தெய்வானை எழுந்தருளிய தேரும், பின்னா் சுவாமி அம்பாள் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், இலஞ்சி பேரூா் திமுக செயலா் முத்தையா, வசந்தகுமாா், கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீா்த்தவாரி, இரவு சுவாமி வீதி உலா மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளல் ஆகியன நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராதா, அறங்காவலா் குழுத் தலைவா் பூவையா, உறுப்பினா்கள் ராஜேந்திரன், கதிரவன், இசக்கி, இசக்கியம்மாள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் கோயில் தேரோட்டம்

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


