
செப்.1 முதல் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு கைப்பேசி கொண்டு செல்லத் தடை
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு வருகிற செப். 1 ஆம் தேதி கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சங்கரநாராயண சுவாமி கோயில்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு வருகிற செப். 1 ஆம் தேதி கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் துணை ஆணையா் இரா.ஞானசேகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் வருகிற செப்.1 ஆம் தேதி முதல் பக்தா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்லத்
தடை விதிக்கப்பட்டது.
பக்தா்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்காக திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் விநாயகா் சந்நிதி அருகில் கைப்பேசி பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு
ஒரு கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும்.திருக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பு மையத்தில் வைத்துவிட்டுச் செல்லலாம்
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






